Monday, May 27, 2019

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி.,.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் ரிலையன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் கம்பெனியும் இணைந்து அருங்காட்சியகத்தில் இன்று வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடத்தினர். காப்பாட்சியர்
சிவ. சத்தியவள்ளி போட்டியினை துவங்கி வைத்தார் திருநெல்வேலி ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் மேலாளர் சத்யநாராயணன் உதவி மேலாளர் சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நாளை நடைபெறவுள்ள நிகழ்வில் வெற்றி கோப்பைகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன மேலும் மகளிருக்கான எம்பிராய்டரி வகுப்புகளும் நடத்தப்பட்டது கலை ஆசிரியர் கவிதா அப்பயிற்சியை அளித்தார்.




No comments:

Post a Comment