இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி சார்பில் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கழுநீர்குளம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் துணை வட்டாட்சியர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில் மண்ணின் தரம் நன்றாக இல்லையென்றால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது என்றும் எனவே விவசாயிகள் தங்களுடைய மண்ணின் தரத்தை வேளாண்துறை மூலமாக ஆய்வு செய்து பின்பயிரிடல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் நீர் மேலாண்மை திட்டங்களை தெரிந்து கொண்டு பண்ணையக்கூட்டை அமைத்து நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சலீமா விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் செயல்படுத்தபடும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கீழப்பாவூர் வேளாண் உதவி இயக்குனர் உதயக்குமார் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், பிரதமரின் மண்வள அட்டை, பிரதம மந்திரி நீர்பாசன திட்டம் மற்றும் மானியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தோட்டக்கலை துறை மூலம் செயல்படும் பிரதமரின் பயிர் காப்பீடு மற்றும் பிரமரின் சொட்டுநீர்ப் பாசன திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ராம் பிரபா பொறியியல் துறை மூலம் செயல்படுத்தபடும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கீழப்பாவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் பொன்ராஜ் கண்ணன் பேசுகையில் விவசாயிகள் தங்ககள் அருவடை செய்த பயிரினை ஆறுமாத காலம் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாத்து பயிருக்கு உரிய விலை பெறலாம் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிதிசார் கல்வி ஆலோசகர்கள் திரு.மகாலிங்கம் மற்றும் திரு.பார்திபன் கலந்து கொண்டு பல்வேறு கடனுதவி; திட்டங்கள் குறித்தும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் விளக்கினர். முன்னோடி வங்கி அலுவலர் கிருஷ்ணன் கிஷான் கிரெடிட் கார்டு குறித்து எடுத்துரைத்தார். கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து பயிற்சியாளர் தீனதயாளன் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் விவசாயகளுக்கு மானியத்துடன் கூடிய மழை துவான், ஸ்பிரேயர், நுண் உரம், உயிர்சத்து உரங்கள் மற்றும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்ச்சியும் இடம்பெற்றது. நிறைவாக துணை வேளாண்மை அலுவலர் முருகன் நன்றி தெரிவித்தார். ஏராளமான விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
கள விளம்பர அலுவலர்,
மக்கள் தொடர்பு கள அலுவலகம்,
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்,
திருநெல்வேலி.