Thursday, September 26, 2019

கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் குறைதீர்ப்பு முகாம்



திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகு இனைந்து நடத்திய காசநோய் குறைதீர்ப்பு முகாம் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இந் நிகழ்சிக்கு பள்ளி சிறார் *மருத்துவர் கோமதி நயினார்* தலைமை வகித்து பேசினார் காசநோயாளிகளிடம் மாத்திரை சாப்பிடும் முறை கேட்டறிந்தார்  மேலும் காசநோய் பரவும் விதம் பற்றி தெளிவாக எடுத்துகூறினார்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் *கணேசன்* காசநோயாளிகளுக்கு உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்து பற்றி பேசினார்

தொற்றாநோய்கள் குறித்தும் சர்க்கரை நோய் குறித்தும் தொற்றா நோய் செவிலியர் பாலவிஜி பேசினார்.

மேலும் இக் கூட்டத்தில் செவிலியர் வனிதா, சுகாதார ஆய்வாளர் காக்கும் பெருமாள்,பாபு  பகுதி சுகாதார செவிலியர் செல்லதாய்,ஆய்வக நுட்பனர் முருககுமார் ஆற்று படுத்துநர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியை காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்





Sunday, September 22, 2019

மதுரையில் காசநோய் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம்




தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் *22.09.2019 மதுரை YMCA கூட்ட அரங்கில்* வைத்து நடைபெற்றது.

நிர்வாகக் குழு கூட்டத்திற்க்கு மாநில தலைவர் *திரு.மாரியப்பன்* அவர்கள் தலைமை தாங்கினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு.அமிர்தலிங்கம்* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில பொது செயயலாளர் *திரு.ஆனந்தன்* அவர்கள் கூட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

1. முன்னாள் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்ட நிகழ்வுகளை நடைமுறை படுத்த வேண்டும்.

2. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.

3. 2017 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டிய விசுவாச வெகுமதியை உடனடியாக வழங்க வேண்டும்.

4. விபத்து நிதி மற்றும் இறப்பு நிதி வழங்க வேண்டும்.

5.விழாக்கால போனஸ், விழாக்கால முன் தொகை வழங்கிட வேண்டும்.

6. விபத்து காப்பீடு மற்றும் குடும்ப நல நிதி வழங்க வேண்டும்.

7. பணியில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.

8. E.P.F. & E.S.I. திட்டத்தில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட்ட வேண்டும்.

9. காசநோய் பணியாளர்களுக்கு காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் நிரந்தர  பணியாளர்களுக்கு Risk Allowance & Risk Leave வழங்குவது போல் மற்ற பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் சுகாதாரத்துறையின் கவனத்திற்க்கு கடந்த 4 ஆண்டுகளாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.   அடுத்த 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேராத பட்சத்தில் விரைவில் போராட்ட அறிவிப்புக்கு மாநில தலைமை தயாராக உள்ளது.

இறுதியாக மாநில செய்தி தொடர்பாளர் *திரு.சுரேஷ்* அவர்கள் நன்றியுறை ஆற்றினார்..

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, September 14, 2019

கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு குறும்படம் மூலம் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி







கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து  பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது

இன்று காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  முதலில் குறும்படம் மூலம் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந் நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை ஆகியவை விரிவாக எடுத்துக்கூறினார்

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நபர்களிடமும் காசநோய் அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டுஅறியபட்டது

சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும் என்று அறுவுத்தபட்டது

காசநோய்
மேலும் முகாமில் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அன்றாடம் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பேசினார்

கூட்டத்தின் முடிவில் காசநோய் உறுதிமொழி ஏற்கப்பட்டது

இம் முகாமில் காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி மற்றும்  சுகாதார பார்வையாளர்கள் திருப்பதி,முருகன், சுரேஸ்குமார் மற்றும் அலுவலர் இளங்கோ, சாத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி நன்றி கூறினார்

Thursday, September 5, 2019

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பாக மரம் நடும் விழா

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பாக மூலைக்கரைபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது
விமன் இந்தியா மூவ்மென்ட்
நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
மாணவ மாணவிகளுக்கு மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் விமன்இந்தியா மூலைக்கரைபட்டி நகர நிர்வாகிகள் பீமா,பாத்து
மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்...




நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தின விழா

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தின விழா நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி வரவேற்றார் நிகழ்ச்சியில் நெல்லையின் துணை ஆணையர் ச. சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆசிரியர் தினவிழாவை பற்றி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆசிரியரையே சார்ந்தது எனவும் மாணவர்களிடம் நல்லொழுக்கங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது எனவும் குறிப்பி ட்டார். அதனை தொடர்ந்து தனது   பள்ளி பருவ நிகழ்வினையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் பயிற்சிகளில் பயிற்சி ஆசிரியராக விளங்கும் கலை ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு நெல்லை புறநகர் ரோட்டரி சங்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அருங்காட்சியகம் சார்பாக அவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. நெல்லை புறநகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜமால் முகமது ஈசா, செயல் பொருளாளர் ஜெய்லானி,  சான்ஷா பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கவிஞர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.




Wednesday, September 4, 2019

வ.உ.சி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில் நடந்தது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில் நடந்தது. இதையொட்டி நடந்த விழா நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது...