Saturday, August 31, 2019

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர், மூஞ்சுறு மற்றும் பழங்கள் முதலிய பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சி கலை ஆசிரியர் கார்த்திஷ்வரி அவர்களால் நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் இப் பயிற்சியினை மேற்கொண்டனர்.






No comments:

Post a Comment