எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலங்குளம் தொகுதி செயற்குழு கூட்டம்
நடைபெற்றது
தொகுதி தலைவர் பத்தி ஹாஜா அவர்கள் தலைமையில் 30/08/19 அன்று மாலை 06:30 மணியளவில் கட்சியின் முதலியார்பட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்
தொகுதி துணை தலைவர் செய்யது பாஸில், செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1,தொகுதி இணை செயலாளராக முதலியார் பட்டி ஜாஹிர் உசேன் நியமிக்கப்பட்டார்
2. ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட இரவணசமுத்திரம் , முதலியார்பட்டி , பொட்டல்புதூர் , பள்ளக்கால் புதுக்குடியிருப்பு மற்றும் சம்பன்குளம் போன்ற பகுதிகளில் பார்டி கன்வென்ஷன் நடத்த வேண்டும்
3. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தொகுதியில் உள்ள இரவணசமுத்திரம் , முதலியார்பட்டி , பொட்டல்புதூர் , பள்ளக்கால் புதுக்குடியிருப்பு மற்றும் சம்பன்குளம் நகரம் சார்பாக போட்டியிடும் இடங்களில் பூத் கமிட்டி நியமனம்
4. இரவணசமுத்திரம் பகுதியில் மகளீர் அணி சார்பாக தெருமுனை கூட்டம் நடத்துவது
5.இரவணசமுத்திரத்தில் நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள திப்புசுல்தான்விளையாட்டு திடலை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர் களை அழைப்பது ,
6.காந்திநகரில் 30 ஆண்டுகளாக அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் உடனடியாக அரசு அமைத்து தரவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
செயற்குழு கூட்டத்தில்
முதலியார்பட்டி மேற்கு கிளை தலைவர் ஹாஜா மைதீன் (எ) ஹாஜி ,
பொட்டல்புதூர் நகரத் தலைவர் பி.எஸ்.பைசல் ,
பள்ளக்கால்புதுக்குடியிருப்பு நகரத் தலைவர் சேக் செய்யது அலி ,
பள்ளக்கால் நகர துணைத்தலைவர் செய்யது அலி , கலந்து கொண்டனர்.
இறுதியாக இரவணசமுத்திரம் நகர செயலாளர் இரவணை உசேன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்
No comments:
Post a Comment