Monday, August 26, 2019

சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்த முதியவரை மீட்டு மறுவாழ்வளித்த SDPI கட்சியினர் !



 நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆனை குளத்தை சேர்ந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்ததை கவனித்த  அன்வர் சாதிக் என்பவர்  உடனடியாக SDPI கட்சியினருக்கு  தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த
#SDPI செயல்வீரர்கள், மற்றும் தமுமுக சகோதரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றுதிரன்டு, பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு சுத்தப்படுத்தி, காயங்களுக்கு மருந்து வைத்து காவல்துறை உதவியுடன் அருகிலுள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில்  செயல்படும் ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்த்தனர். ஆதரவற்ற முதியவரை மீட்டு தேவையான உதவிகளை செய்த சகோதரர்களின் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்...




No comments:

Post a Comment