மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக போராட அழைப்பு.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்.டி.டி.யூ )மாநில தலைவர் தஞ்சை பாருக் நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது. மத்திய அரசு கொண்டு வர உள்ள மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும். இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வலியுறுத்தியும் போக்குவரத்து வாகன வரிகளை உயர்த்தி மோட்டார் தொழிலை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து
வரும் ஆகஸ்ட் 27 எஸ்.டி.டி.யூ
நெல்லை மாவட்ட செயலாளர் பசீர்லால்
தலைமையில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
இதில் மாநில பொதுசெயலாளர் அஜீத் ரஹ்மான் கண்டன உரையாற்ற உள்ளார்
இதில் தொழிளார்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதே போல மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பல மோட்டார் வாகன தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல்லாயிரகணக்கான தொழிலார்கள் வேலை இழக்கும் அபாய சுழல் நிலவுகிறது.
பிரிட்டானியா, பார்லி போன்ற அரை நூற்றாண்டை கடந்த நிறுவனங்களும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால்
தள்ளாடி வருகிறது.
எனவே ஜி.எஸ்.டி. மோட்டார் வாகன சட்டம் போன்றவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவேண்டும் என கூறினார்.
இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, எஸ்.டி.டி.யூ நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பசீர் லால் துணை தலைவர் கல்வத், பொருளாளர் மைதீன், செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை முஸ்தபா, திவான், பாளை சிந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment