Thursday, August 15, 2019

சமூகசேவையில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்களையும் சாதனையாளர்களையும் பாராட்டி சான்றிதழ்





இன்று காலை பாளையங்கோட்டை வ.வு.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் I.A.S  அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர்களையும் தற்போது சமூகசேவையில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்களையும் சாதனையாளர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் இதில் தாமிரபரணி ஆற்றின் தூய்மை பணியில் தொடர்ந்து பங்கேற்று அந்த நிகழ்வுகளை வீடியோ&போட்டோஸ் மூலமாக ஆவணப்படுத்தி வருவதை பாராட்டி V.G.P.G கிளப் சிகாமணி,NVPA ஜுப்லி ராஜா கல்லிடைகுறிச்சி பகுதியில் நடைபெறும் தூய்மை பணிகளை சிறப்பாக ஆவணப்படுத்திய வரதராஜன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார்   இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட நமக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஏற்படுத்தி வருகிற சென்னை அண்ணா பல்கலை கழக ஊரக வளர்ச்சி துணை இயக்குனர் திரு.சக்திநாதன் சார் அவர்களுக்கும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஸ் அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

No comments:

Post a Comment