Wednesday, August 14, 2019

*தூத்துக்குடி காசநோய் துணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கினார்*





தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன்  முன்னிலையில் நடைபெற்றது.

இன்று காலை 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் பின்பு காவல்துறையினர்,தியாகிகளின் வாரிசுகள்,அரசு அலுவலர்கள், விளையாட்டு,கலைத் துறையில் சிறந்து விளங்கிய பலருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

காசநோய் துறையில் சிறப்பாக பணியாற்றியமக்காக *துணை இயக்குநர் (காசநோய்) டாக்டர். க.சுந்தரலிங்கம் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,* அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.

துணை இயக்குநர் அவர்களை காசநோய் துறையின் சார்பாக அனைத்து பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment