Wednesday, August 21, 2019

அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்...

அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அறிவியல்பூர்வமான வேலை ஒதுக்கீடு, பணியிட மாற்றத்தில் ஒருமித்த கொள்கை வகுத்தல், கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புதல், பதவி மறு சீரமைப்பால் மறுக்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள விகிதத்தில் நிலவும் வேறுபாடுகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 01.08.2019 முதல் வருங்கால வைப்புநிதி அலுவலக ஊழியர்களால் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இன்று 21.08.2019 மதியம் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளன துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் ராஜேஷ்வர சிங், துணைச் செயலாளர் ஹரிஹரன், ஒருங்கிணைப்பு செயலாளர் சசிக்குமார், பொருளாளர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்...



No comments:

Post a Comment