Monday, August 26, 2019

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்





நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பாக  வாகன காப்பீடு, மற்றும் வாகன
வரிகளை உயர்த்தி  ஏழை மோட்டார்
தொழிலார்களின் வயிற்றில் அடித்து மோட்டார் வாகன தொழிலை அழிக்கின்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேற்படி வாகன காப்பீடு. மற்றும் வாகன வரிகளை திரும்ப பெற கோரியும் , மோட்டார் வாகன தொழிலை காப்பாற்ற வலியுறுத்தியும் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன் வரவேற்புறை நிகழ்த்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அஜீத் ரஹ்மான். மாநில செயலாளர் சாந்து இப்றாஹிம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இதில்  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி  தொழிற்சங்க  மாவட்ட இணை செயலாளர் ஜாபர் சாதிக்
ஏர்வாடி சேக் இஸ்மாயில்  பாளை சிந்தா மற்றும் எஸ்.டி.டி.யூ உறுப்பினர்கள் 200 கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். மாநில பொது செயலாளர் அஜீத் ரகுமான் தனது உரையில் கூறியதாவது.பணமதிப்பு இழப்பீடு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற தவறான  பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.  லட்சக்கணக்கான  தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகள்  மோடி அரசால்  கார்ப்ரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கபடுகிறது. டாடா, பிரிட்டானியா ,பார்லே போன்ற நிறுவனங்கள் அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தடுமாறுகிறது.  கார்ப்ரேட்களுக்கு ஆதரவான மோட்டார் வாகன சட்ட திருதங்களால்  மோட்டார் வாகன தொழில் அழியும் சூழல் உருவாகி உள்ளது. என கூறினார்.

No comments:

Post a Comment