Thursday, July 25, 2019

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டில்கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்.







நெல்லையை உலுக்கிய நெல்லை மாவட்ட  முன்னாள்   மேயர்    உமா மகேஸ்வரியுடன் கொலை செய்யபட்ட  பணிப்பெண் மாரியம்மாள்  குடும்பத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட
செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதில்  மாரியம்மாள் அவர்களின்  மூன்று குழந்தைகளுக்கு அரசு தரப்பில் இருந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும். குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். அதே போல் திருநெல்வேலி  மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல  விரிவாக்க பகுதிகளான  டீச்சர்ஸ் காலனி, அமுதாபெட், ரோஸ்நகர் போன்ற பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை வசதி,  மின்விளக்கு வசதி, போன்றவற்றை செய்து தரகோரியும்,
மக்கள் நடமாட்டம் குறைவா உள்ள
பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும் நெல்லையில் விரிவாக பகுதிகளில் காவல்துறை ரோந்து பணிகளை தீவிர படுத்தவும், மேயர் கொலை வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளை  விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிகழ்வில் எஸ்.டி.டி.யூ மாவட்ட செயலாளர் பசீர்லால், துணை தலைவர் கல்வத், பொருளாளர் மைதீன்,
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பாளை  தொகுதி இணை  செயலாளர்  புஹாரி சேட், மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள்
சிந்தா, பர்கிட் கிளை தலைவர் சுபைர் முகமது, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment