Sunday, July 21, 2019

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு பஸ் நிலையத்திலிருந்துதேனி சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை துவக்கப்பட்டது .




தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்துள்ளது. அதனடிப்படையில் கடமலை மயிலை ஒன்றியத்தில்  கடமலைக்குண்டு பஸ் நிலையத்திலிருந்துதேனி சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை துவக்கப்பட்டது .இதுகுறித்து தேனி மாவட்ட  இயற்கை வேளாண்மை  உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்  செந்தில் குமார் அவர்களிடம் கூறியபோது இந்த உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் தற்பொழுது செயல்படுகிறது இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தன்னுடைய தோட்டத்தில் விளையும் பொருட்களை நேரடியாக வந்துவிவசாய காய்கறிசந்தையில் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் பொதுமக்களுக்கு குறைவான விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கின்றன. இந்த காய்கறிசந்தை திறப்பதற்குமுன்னாள் தேனி ஆண்டிபட்டி மற்றும் சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் வாங்கி வந்தனர் தற்போது தங்கள் கிராமத்தில் சந்தை திறந்து உள்ளதால் கடமலை மயிலை ஒன்றியத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சந்தையில் வந்து குறைந்த விலையில் காய்கறிகள் வாங்கி பயனடைந்து வருகின்றனர் என்று கூறினார்.

No comments:

Post a Comment